உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக ரஷ்யாவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற இராணுவ வீரர்களில் கிட்டத்தட்ட 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களில் 9,000 பேர் முறையான ராணுவப் பயிற்சியின்றி சண்டையிட்டு இறந்திருக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
அத்தோடு, சமீபத்தில், ரஷ்யா சிறைகளில் இருந்து கைதிகளை இந்த அதிகாரப்பூர்வமற்ற போராளிகளில் சேர்த்தது, மேலும் அவர்கள் உக்ரைனின் புக்முட் நகரத்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றியுள்ளனர்