மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ஆம் திகதி பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மின் கட்டண உயர்வுக்கு எதிராக, ஆடை, தொழில், கட்டுமானம் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.