பகல என அழைக்கப்படும் சிசிர குமார ஜயசிங்க கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ஊர்கஸ்மன்ஹந்திய, கோரக்கீன பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி,குறித்த நபரிடமிருந்து வாள், தடை செய்யப்பட்ட கத்தி, இராணுவம் பயன்படுத்தும் கோட் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு,44 வயதான இவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பிரதீப் குமார ஜயவர்தன என்றழைக்கப்படும் மைக்கல் நமட்டவுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.