ஒரு வேட்பாளர் தேர்தலின் போது அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத புதிய தேர்தல் முறையை எவ்வாறு அமைப்பது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இளைஞர் குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டு நாட்டின் முக்கிய பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்த இந்த இளைஞர்கள் குழு, அந்தக் கட்டுரையை எழுதி வெளியிட்ட இளம் ஊடகவியலாளர்களான அனோஷ்கா ஜயசூரிய மற்றும் ஷானன் சல்காடு ஆகிய இருவரையும் சந்திக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த இளம் குழுவிடம் கேட்டுக் கொண்டார்.
இதன்படி, இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்கும் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதிக்கு இச்சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தாகவும் இதில் இளைஞர் குழுவினர் தமது கவலைகளையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவற்றுக்கு பதிலளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாடசாலை மட்டத்தில் முறையான மனநலக் கல்வியின் அவசியத்தையும், மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான கல்விப் பொறிமுறையின் அவசியத்தையும் இளைஞர் குழு வலியுறுத்திய நிலையில், கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் முக்கிய விவாதப் பொருளாக இக் கலந்துரையாடலில் முக்கிய விடையமாக இருந்துள்ளது.
மேலும், பாடசாலைகளில் மனநலம் தொடர்பில் செலுத்தப்படும் கவனம் போதாது என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தொடர்பில் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், இத்துறைக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆளணிகள் இல்லாததால் நாடு எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினையாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அதனைப் போக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பல நாடுகளில் வரி என்பது புதிய கருத்தல்ல, ஆனால் இலங்கையில் அப்படி இல்லை என வரி விவகாரம் குறித்து இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த ஜனாதிபதி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றம் ஆராய முடியும் எனவும் அதற்காக ஜனாதிபதியினால் பல குழுக்களை நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதோடு கணக்குகள் மற்றும் பொது நிதிக் குழு மற்றும் செயல்முறை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற பட்ஜெட் அலுவலக மசோதா கொண்டு வரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய வரிகள் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும், திடீரென சம்பளத்தில் பெரும் பகுதியை செலுத்த வேண்டியிருப்பதனால் அதனை மக்கள் பாரமாக உணர்ந்துள்ளதாகவும் இளைஞர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“ஒரு பெரிய பட்ஜெட்டில் எல்லாம் முறையாக ஒதுக்கப்படுவதால் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எந்தவொரு பட்ஜெட்டிலும், பணம் முறையாக செலவிடப்படுவதை பாராளுமன்றம் உறுதி செய்கிறது. எனவே, பாராளுமன்றம் தனது அதிகாரங்களை இப்போதே பயன்படுத்த வேண்டும். கடந்த முறையும் மேற்பார்வைக் குழுக்களின் தலைவர் பதவிக்கான காலியிடத்தை எதிர்க்கட்சிகள் நிரப்பவில்லை என்று நினைக்கிறேன். இம்முறை அவர் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்காக பாராளுமன்றத்திற்கு வரவில்லை. ஆனால் மீதி, அதற்கு எதிர் கட்சியில் இருந்து சில பெயர்களைக் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். அதுதான் வெளிப்படைத்தன்மை. செலவுகள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றி நீங்கள் அவர்களிடம் கேட்கலாம் எனவும் இலங்கை அசாதாரணமான பொருளாதார நிலையில் இருப்பதாகவும், அதிலிருந்து மீள்வதற்கு கடனை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற வேறு துறைகளில் இருந்து அரசாங்கம் சில செலவினங்களைக் குறைத்து பணத்தைத் தேட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது இலகுவான காரியமல்ல, ஆனால் யாரேனும் இதைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அதிலிருந்து விடுபட வேண்டும். அதை போக்க, கடனை மறுசீரமைக்க வேண்டும்.
மேலும், கடனை மறுசீரமைக்க, நாம் நமது செலவைக் குறைக்க வேண்டும் அல்லது அதற்கான பணத்தைத் தேட வேண்டும். சில பகுதிகளில் அவ்வாறு செய்தோம் ஆனால் சில துறைகளுக்கு நாம் பணத்தை பெற வேண்டிய நிலை உள்ளது..
அதனால்தான் சமீபகாலமாக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படிச் செய்தாலும் மின்சார சபைக்கு நஷ்டம்தான். வேறு வழியில்லை. இல்லாவிட்டால் மின்சாரம் இல்லாமல் வாழ வேண்டி வரும். இந்த சூழ்நிலையில் இருந்து விரைவாக வெளியேற வேண்டுமானால், சில விஷயங்களை தயக்கத்துடன் கூட செய்ய வேண்டும்.
அத்தோடு, இளைஞர் குழு தனிப்பட்ட பொறுப்புக்கூறல் பிரச்சினையையும் எழுப்பியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓரளவு கல்வி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இக்கருத்தினை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதோடு இது நடக்க சிறிது காலம் எடுக்கும் என்று குறிப்பிட்டதோடு பல இளைஞர்களுக்கு பட்டம் அல்லது வர்த்தக அனுபவம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது வாக்காளர்களின் பணி என்பதை நினைவு கூர்ந்தார்.
மேலும், “தனிப்பட்ட பொறுப்புக்கு வரும்போது நீங்கள் முன்னுரிமை கொடுக்க ஒரு வழி இருக்கிறது. அவர்களில் யாரும் தேவையில்லை என்றால், சரியான கட்சிக்கு வாக்களித்து தனக்கு விருப்பமான நபரைத் தேர்ந்தெடுக்கலாம்.
இருப்பினும், செயல்முறைக்கு நிறைய பணம் செலவாகும். எனவே, அதிக செலவு செய்யாமல் சிறந்த தேர்தல் முறையை எப்படி அமைப்பது என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான பணம் தனிப்பட்ட வேட்பாளர்களால்தான் செலவிடப்படுகின்றது, கட்சிகளால் அல்ல” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, பாராளுமன்ற அவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் செய்கின்றார்கள் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இவ்வாறான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல எனவும், ஏனைய நாடுகளில் இவ்வாறான செயற்பாடுகளை தாம் கண்டுள்ளதாகவும், இது இலங்கைக்கு மாத்திரமல்ல எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இவ்வாறான செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.