மருந்துகளை வழங்குவதே தனது பிரதான இலக்கு என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக தெரிவித்ததோடு மருந்துகளை பெற்றுக் கொள்வதில் உள்ள தடைகள் தொடர்பில் எதிர்காலத்தில் அறிக்கை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, அங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஏற்கனவே மருந்து விநியோகஸ்தர்களுக்கு 60 பில்லியன் ரூபா கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக சப்ளையர்கள் மருந்துகளை வழங்குவதில் தயக்கம் காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.