இன்று (20) ஆம் திகதி நள்ளிரவிற்குப் பிறகு, அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்த்தினை கலைக்கக்கூடிய அதிகாரமானது ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
மேலும், நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.
இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ஷவினுடைய தலைமையில், தற்போதைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தினுடைய ஆரம்ப அமர்வானது 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டிருந்ததோடு குறித்த நாளில் முதல் அமர்வு இடம்பெற்றதனால் இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகின்றது.
எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.