
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுகஸ்தோட்டை, கண்டி, குண்டசாலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி விசேட அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை, கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நகர திட்டமிடல் துறை அறிஞர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.