கினிகத்தேனை – கெனில் தோட்டத்தில், தொழிலாளர்களின் நெடுங்குடியிருப்பு ஒன்றில், ஏற்பட்ட தீப்பரவலில், 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த தீப்பரலை கட்டுப்படுத்த பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக ஏனைய வீடுகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தீப்பரவல் காரணமாக 4 வீடுகளிலிருந்த தளபாடங்கள், அத்தியாவசிய ஆவணங்கள், ஆடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தினால் நிர்க்கதியான 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், அயலவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாக, இந்தத் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.