
அவிசாவளை கட்டுவாவில வீடொன்றில் தனியாக இருந்த வயோதிப பெண்ணை பயமுறுத்தி 50,000 ரூபாவை இனந்தெரியாத நபர் ஒருவர் வந்து கப்பம் பெற முற்பட்டதில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சமரசிங்க ஆராச்சிகே பத்மாவதி என்ற 66 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.
இதன்படி, நேற்று (20) இரவு 8 மணியளவில் வீட்டின் முன் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கியைக் காட்டி குறித்த பெண்ணை கதவைத் திறக்குமாறு மிரட்டியதாகவும் குறித்த பெண் கதவு திறந்து விடும் என்று பயந்து கதவை நோக்கிச் சென்று இறுக்கமாகப் பிடித்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, அவர்கள் வந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, துப்பாக்கிச் சூடு அவரது வயிற்றின் இடது பக்கத்தில் தாக்கியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.