கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு வேறொரு கட்சிக்கு ஆதரவளித்த 1,137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் 341 மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் கட்சி அங்கத்துவம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏனையஉறுப்பினர்களிடமிருந்து வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்தோடு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் சுமார் 300 பேர் டம்பாக்கமுள்ள நியாயங்களை சொல்ல வாய்ப்பு கேட்டிருந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனைவரையும் நீக்கியுள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இதுவரை முடிவடையாத நிலையில், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாக 1,137 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க உள்ளது.