உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் தேர்தலை நடத்துவதற்கான நிதி விநியோகிக்கப்படாமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
எவ்வாறாயினும், அதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் தேர்தலை நடத்தாதது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்ததோடு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சமகி ஜனபலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.