பிக்கு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றிரவு குறித்த குழுவினர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற சபையின் இரண்டு பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட குழுவினரின் சுகபோகத்தை விசாரிக்கச் சென்ற சட்டத்தரணிகள் தாம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பத்தரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த இந்த குழுவினரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் 48 பிக்குகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வியை மீள ஆரம்பிக்குமாறும், முன்னர் கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.