பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் உபாலி ஜயசிங்க ஜனாதிபதி பாதுகாப்பு பாதுகாப்பு பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குற்றப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவித, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.