இணையத்தில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தியாவை சேர்ந்த 21 வயதான முலாயம் சிங் யாதவ் என்ற இளைஞர் பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜீலானி என்ற 19 வயது பெண்ணை போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த காதல் உறவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் விளையாடும்போது அவர்கள் தொடங்கியதாகவும் இருப்பினும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடியால், அவர்கள் ஒருவரையொருவர் பார்வையிட விசா பெறுவதும் கடினமாக இருந்ததுள்ளது .
இதன் காரணமாக கடந்த செப்டம்பரில் நேபாளம் சென்ற அவர்கள் அங்கு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு பின்னர் இந்தியாவின் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.
எனினும், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக ஜீவானி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதோடு யாதவ் போலி ஆவணங்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டவருக்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், யாதவ் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.