நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரும் இறுதிக் கட்டத்தை இலங்கை தற்போது எட்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் சில பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.