(எஸ்.அஷ்ரப்கான்)
நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலினால் உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 24ம் திகதி நற்பிட்டிமுனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர்கனி (ஹாமி) நெறிப்படுத்தலில் ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல். ரஊப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் எச்.எம். தசீர் (ஹாமி) சவூதி அரேபியாவில் உள்ள மதீனா இஸ்லாமியா சர்வதேச பல்கலைகழகதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நற்பிட்டிமுனையிலிருந்து இப்பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இரண்டாவது ஆலிமாவார்.
எஸ்.எம் வாஜீத் (ஹாமி) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்குரிய பணம் மற்றும் அன்பளிப்பும் ஆசிரியர் எம்.பி.எம்.நிஸ்பர் (ஹாமி) தொழிலதிபர் ஏ.கே.நஜீமுதீன், ஹிக்மா ஜும்மா பள்ளித் தலைவர் ஐ.எல்.றஊப்தீன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.