பல அழகு சாதனப் பொருட்களின் இறக்குமதித் தடைகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்படி, துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 4 கொள்கலன்களில் உள்ள அழகு சாதனப் பொருட்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அங்கு தெரிவித்தார்.