நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் நிதியை விடுவிக்காமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் எனக் கோரி சமகி ஜன பலவேகயின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் கூடவுள்ளது.
மேலும், குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.