
இருதரப்புக் கடன்கள் தொடர்பில் சீனாவுடன் உடன்பாடு எட்டப்படும் வரை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் ஈடுபட முடியாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கருத்துத் தெரிவிக்கையில்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடங்கள் கடன் நிவாரண காலத்தை வழங்குவதற்கு சீனா உடன்பட வேண்டும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தில் ஈடுபடுவது இவ்வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் வரை தாமதமாகலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டினார்.