பாணந்துறை பிங்வத்த பகுதியில் இன்று காலை 08 மணியளவில் ஜீப்பில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளதோடு துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்தவர் கடவட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.