உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைகுழுவின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்படி, தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, வாக்குரிமையை வென்றெடுப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.