ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பல ஊடகங்களிலும் இன்று செய்திகள் வெளியாகியிருந்தது.
மேலும், அச்செய்தியில் ஜனாதிபதியை வெளிநாடு ஒன்றில் வைத்து கொலை செய்ய சில குழுக்கள் சதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.