
இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 82 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.