19 பணக்கார நாடுகளையும், உலகப் பொருளாதாரத்தில் 85 சதவீதத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனையும் உள்ளடக்கிய G20 மாநாட்டின் தொடக்க நாள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக பல்வேறு நாடுகள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.நிலையில் சூடுபிடித்துள்ளது.
எவ்வாறாயினும், வளரும் நாடுகளைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளில் கவனம் செலுத்த இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால், உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியிடப்பட்டதால், கூட்டறிக்கையின்றி முதல் நாளை முடித்துக்கொண்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வளரும் நாடுகள் போராடி வருவதக்கவும் அத்தோடு குறித்த நாடுகள் தாங்க முடியாத கடன் நெருக்கடியினை சந்தித்து வருவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை வளரும் நாடுகளும் சந்திப்பதாகவும் இவ்வாறான பின்னணியில் இது போன்ற முக்கியமான விடயங்களை விவாதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜி20 மாநாட்டில் பல நாடுகளின் கருத்துக்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாகவே காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளர்.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலத்தில் ஆற்றிய ஜி20 மாநாட்டின் தொடக்க உரையும் சிறப்பு வாய்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.