
03 ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், சீனா உதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற பாடசாலை சீருடை துணிகள் கையிருப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை பாடப்புத்தக விநியோகம் பாடசாலை 03 ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.