சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) கீழ் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட எரிசக்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ள சீனா நிறுவனங்கள் தொடர்ந்து நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான திட்டங்களுக்கு பாகிஸ்தான் வழங்க வேண்டிய பணத்தை வழங்குவதாக பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் அவை வெறும் வாக்குறுதிகள் மட்டுமே எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சீனா நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ள சீனா தூதரகத்திற்கும், சீனாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, ஒரு சீனா காப்பீட்டு நிறுவனம், M/s Sinosure, பாக்கிஸ்தானில் ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் திட்ட மேலாண்மை நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், மின் துறையில் திட்டங்களுக்கு புதிய நிதி வசதிகளை காப்பீடு செய்ய தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.
மேலும், அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து கடன் கடிதங்களை வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக, பாகிஸ்தானில் சீனாத் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்களும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.