சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இருந்த மிகப்பெரிய தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடனாளியான சீனா, ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்துப்பூர்வ அனுமதியை மார்ச் 6ஆம் திகதி வழங்கியதாக இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பரில் நிதி ஊழியர்கள் ஒப்புக்கொண்ட கடன் தொகையை IMF வாரியம் கடன் வழங்கும் நாடுகள் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதியை இலங்கை எதிர்பார்த்திருந்தது, ஆனால் அது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.