
நாடு முழுவதிலுமுள்ள செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்த்திட்டமானது இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும், “50 பேருக்கு ஒழுங்குபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் காலம் இந்த வாரத்துடன் முடிவடைந்ததுடான் குறித்த 50 பேரும் மிக வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டியுள்ளனர் என்பதோடு விபத்து ஏதும் ஏற்படவில்லை எனவும் குறித்த வெற்றியின் அடிப்படையில் காதுகேளாதவர்களுக்காண ஓட்டுநர் உரிமம் இந்த வாரத்திலிருந்துவழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.”
அத்தோடு, ஓட்டுனர் உரிமம் பெற்ற, கால்களை இழந்த படைவீரர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மருத்துவ அறிக்கை பெற வேண்டும் என்ற வரம்பு இருக்கின்ற போதிலும் அதனை 4 மற்றும் 8 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.