மொரட்டுவை மாநகர சபைக்கு பிரதமர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட வாகனம் ஒன்று காணாமல் போயுள்ளதாக இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சுஜித் புஷ்பகுமார, மேயர் டபிள்யூ சமன் லால் பெர்னாண்டோவிடம் இது குறித்து கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த வாகனமானது கொட்டாவ பிரதேசத்தில் வாகனங்கள் புதுப்பிக்கப்படும் இடத்திற்கு நகர சபையின் உயர் அதிகாரி ஒருவரை அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இதற்கு பதிலளித்த மேயர், இந்த வாகனத்தின் உரிமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.