
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்
எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விதிகளை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகப் பொறுப்பதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்களிப்புச் சீட்டுக்களை தபால் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சக அலுவலகப் பொறுப்பதிகாரி கங்கானி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.