
உள்ளூராட்சி சபையை நடத்துவதில் அரசாங்கம் தலையிடுவதை தடுக்குமாறு கோரி, கொழும்பு மாநகர சபைக்கு சமகி ஜன பலவேக சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேலும்,விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி, குறித்த கோரிக்கையை ஏற்று மனுவை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.