
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் ஆசிரியர் உதவியாளர் பதவி நீடிப்பு இடம்பெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்குள், ஆசிரியர் நியமனம் தொடர்பில் மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.