
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்ட நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல்களை சரிபார்க்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய தகவல் ஆய்வு மற்றும் தகவல் சரிபார்ப்பு செயல்முறையின் கீழ் நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் தகுதிச் சரிபார்ப்பு கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
இதன்படி, உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறினால் விண்ணப்பதாரர்கள் நலன்புரி சலுகைகளை இழக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.