தற்போதுள்ள சட்டங்களின்படி உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் ஆணையாளர்களின் கீழ் வந்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் உள்ளுராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடைபெறும் வரை, உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த நிறுவனங்களின் அதிகாரம், அந்தந்த நிறுவனங்களின் பிரதம அதிகாரிக்கு மாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.