சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதி தொடர்பில் நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும், அதற்கான உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதோடு “நேற்று, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை இலங்கையுடனான விரிவான கடன் வசதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி.கடனை அங்கீகரிப்பதன் மூலம், கடனை மறுசீரமைக்கும் வலிமை இலங்கைக்கு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை இனி ஒரு திவாலான நாடாக கருதப்படாது. எனவே சாதாரண பரிவர்த்தனைகளை தொடங்கலாம். மேலும், நமது அந்நிய செலாவணி நிலைமையை மேம்படுத்த இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தத்தைப் பெற எங்களுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும், வங்கிகளின் தலைவர்கள் மற்றும் உலக வங்கிக்கும் நன்றி கூறுவது எனது கடமை எனவும் இது தொடர்பில் நான் நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதோடு அதற்கான உடன்படிக்கை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்” என ஜனாதிபதி தெரிவித்தார்.