சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இம்முறை செய்து கொண்ட ஒப்பந்தம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த கடன் பணத்தை வரவு செலவுத் திட்ட நிதிக்காக பயன்படுத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும் என இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் லாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கருத்தை பதிவு செய்வது பொருத்தமானது எனவும் அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.