தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் சந்தேகநபர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் பூலச்சங்கேணி, கதிரவெளி, வாகரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்தோடு, தேசிய அடையாள அட்டை அல்லது பொலிஸ் அறிக்கை இல்லாத காரணத்தினால் சந்தேகநபர் புத்தளம் பகுதியில் உள்ள மடல் வாடி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இரண்டு வாரங்களுக்கு விடுதலைப் புலிகள். அமைப்பில் இராணுவப் பயிற்சி பெற்று பின்னர் அந்த அமைப்பில் இருந்து தப்பிச் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கிய பொய்யான பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.