உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகள் பதிவதை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும், தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி ஏப்ரல் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிக்கும் திகதி தொடர்பில் உள்ளுராட்சி அதிகாரிகள் விரைவில் தீர்மானம் எடுப்பார்கள் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. .
இதன்படி, கட்சியின் செயலாளர்கள் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை கருத்திற் கொண்டு, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதை ஒத்திவைத்து, எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.