இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று (24) பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் அலுவலகத்தில் இருந்து இந்த உத்தரவு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குஜராத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அவர் நேற்று (23) குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் காந்தி தெற்கு கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிவந்தார்.
இதன்படி, 30 நாட்களாக ஜாமீனில் உள்ள அவர், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, தலைநகர் டெல்லியில் இன்று (24) காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ராகுல் காந்தி அனுமதி கோரியதாகவும், ஆனால் அது மறுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அரசுக்கு எதிராக மேலும் பல போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளதோடு தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப்பெயர் குறித்து ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு கருத்து தெரிவித்த குறித்த டர்ஹாண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் வரை அல்லது அவர் விடுவிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு இந்தியாவில் தேசிய தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.