கட்டார், பின் துர்ஹாம் அல் மன்சூரா பகுதியில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர் 56 வயதான நிஷங்க சில்வா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரது சடலம் அவரது மகனால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, விபத்து காரணமாக அப்துல் ரசாக் ஜமீல் என்ற 60 வயதுடைய நபரும் காணவில்லை என கத்தாரில் பணிபுரியும் அவரது மகன் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விபத்து குறித்து மேலும் அறிய கத்தார் தூதரகத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஏற்கனவே அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தூதரக வட்டாரங்களின்படி, மீட்புக் குழுக்கள் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பன்னிரண்டு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் காப்பாற்ற முடிந்ததுள்ளதாகவும் மேலும் காயமடைந்த ஒன்பது பேர் தற்போது கத்தாரில் உள்ள ஹமாத் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிவதக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாரில் பணிபுரிகின்ற நிலையில் 13,042 இலங்கையர்கள் 2023 இல் கத்தாருக்கு வேலைக்காக சென்றுள்ளதாகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தற்போது கட்டாரில் பணியாற்றி வருகின்றதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.