சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக இலங்கை பெற்ற 330 மில்லியன் டொலர்களில் 121 மில்லியன் டொலர்கள் இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணையாக செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கடன் திட்டத்தின் முதல் தவணை நேற்று திருப்பி செலுத்தப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, நாட்டின் எதிர்காலத் திட்டங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்.