தடை செய்யப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் முன்னாள் அதிகாரிகள் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள எதேச்சதிகாரமாக செயற்பட்டதன் காரணமாகவே சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு தடை விதித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் மிகவும் இணக்கமாக செயற்படுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் நாட்டுக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் இணக்கமான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிகள் உட்பட கால்பந்தாட்டத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு மற்றும் வீதி வரைபடம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஊழலற்ற உதைபந்தாட்ட நிர்வாகத்தை வீரர்கள் மற்றும் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஏற்படுத்த அமைச்சு தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.