புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியினால் தாக்கப்பட்டதாகக் கூறி முஸ்லிம்களுக்காக நிறுவப்பட்ட காதி நீதிமன்றத்தின் அதிகாரி சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரின் மகளின் வீட்டில் நேற்றிரவு 26ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இச்சம்பவத்தில் மொஹமட் ரஹ்மத்துல்லா மொஹமட் என்ற நபரே தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். .
இதன்படி, புத்தளம் ஜும்ஆ பள்ளியினுடைய கதியராக கடமையாற்றும் நபர் ஊழல்வாதி என்று கூறி அவரை நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததோடு முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டவர் என்பதால் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தது.
மேலும், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் காதி நீதிபதியை தனது மகளின் வீட்டுக்கு அழைத்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளினை புத்தளம் பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றது.