பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலியின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி இன்று விடுமுறையில் இருப்பதால், அது தொடர்பான மனுவை ஏப்ரல் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி வசந்த முதலிகேவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலி, போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி கொழும்பு பிரதான நீதவானால் விடுவிக்கப்பட்திறந்தார்.
மேலும், வசந்த முதலிகேவினை விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதவானின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை மீளாய்வு செய்யுமாறும் கோரி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.