சீனா, ஜப்பான் போன்று தென் கொரியாவும் பிறப்பு விகிதம் குறையும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளம் சமூகத்தை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் தென்கொரிய அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பல குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ பணியில் இருந்து விலக்கு அளிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய கொள்கைகளின்படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ சேவையிலிருந்து தென் கொரியா விலக்கு அளிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.