கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் இருவர் கொட்டாஞ்சேனை பகுதியில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொட்டாஞ்சேனை ஜோஜ்தா சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவுநீர் அமைப்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற போது, இருவரும் திடீரென பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, விஷ வாயுவை சுவாசித்து அவர்கள் மயங்கி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதக்கவும் குழிக்குள் விழுந்த மாநகர சபை ஊழியர்கள் இருவரையும், அந்த இடத்தில் இருந்த மற்ற மாநகர சபை ஊழியர்கள் குழுவினர் மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்படி, விபத்தில் சிக்கிய மாநகர சபை ஊழியர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இவர்கள் மட்டக்குளி மற்றும் மருதானை பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.