தற்போது பசுமைப் பொருளாதாரத்தில் முதலாவதாக பிரவேசிக்கும் நாடாக இலங்கை மாறவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு மாதங்களில் இலங்கையில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கை பசுமை சக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.