இறந்த தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் மம்மியாக வைத்திருந்த நபர் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது, சடலத்தை பார்த்து, அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, போலந்து பாதுகாப்புப் படையினரால் சடலம் மீட்க்கப்பட்டதோடு உடலை வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு, குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2010ஆம் ஆண்டு உயிரிழந்த அவரது தாயாரின் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் அங்கு காணப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.