மல்சிறிபுர ரம்பேவைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களை வழங்காமல் இருந்த அபிவிருத்தி உத்தியோகத்தரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலவச மானியம் வழங்குவதற்கு தேவையான தகவல்களை வேளாண் வளர்ச்சித் திணைக்களத்திற்கு குறித்த அதிகாரி வழங்கவில்லை என வேளாண் வளர்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, விவசாயப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விவசாய ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகாரியின் நடவடிக்கையால் மல்சிறிபுர ரம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசாங்கம் வழங்கிய 10,000 மற்றும் 20,000 ரூபா கொடுப்பனவை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு சீனா அரசு வழங்கிய இலவச மண் உரம், எரிபொருள் மானியம் உள்ளிட்ட பல மானியங்களை விவசாயிகள் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.