இலங்கையில் நிலநடுக்கங்களின் போக்கு அதிகரித்து வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது இந்த விடயத்தை ஆராய்ந்து வருவதாக பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம், பட்டய புவியியலாளர் ஜானக அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம், பட்டய புவியியலாளர் ஜானக அஜித்பிரேம மேலும் கூறுகையில், ரிக்டர் அளவுகோலில் மிகச் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இன்னும் கடலில் இருந்து பதிவாகி வருவதால் தரையில் உள்ள நிலையான கட்டிடங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதன்படி, பேருவளையில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் 3 மற்றும் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.